ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 10 ஜனவரி, 2025

வாழ்வின் நிச்சயமற்ற கணத்தில் எல்லாம்...


வாழ்வின் நிச்சயமற்ற கணத்தில் 

எல்லாம் வேடிக்கை ஒன்றே 

இங்கே எனக்கு பல ஆழ்ந்த 

தத்துவத்தை 

உணர்த்தி விடை பெறுகிறது 

என்னிடமிருந்து அந்த காலம்!

இந்த பிரபஞ்சத்தில் சத்தமின்றி 

சுவாசித்து நான் அனுபவிக்கும் 

ரசனையை 

எந்த விரோதியும் அறிந்துக் கொள்ள 

முடியாமல் 

நான் நேசிக்கும் சமுத்திரத்தின் 

ஏதோவொரு மூலையில் 

மறைத்துக் கொண்டு 

பயணிக்கிறேன் நான் ...

இங்கே என் வாழ்வின் துயரங்களை 

கணக்கிட்டுக் கொண்டே 

கூர்மையான பார்வையால் 

என்னை பார்த்து நகைக்கிறான் 

அங்கே எனது விரோதி ஒருவன் ...

நானும் அவனை பார்த்து 

புன்னகைக்கிறேன்

நேசத்தோடு...

இங்கே நான் எவரையும் 

நேசிக்கவும் இல்லை 

வெறுக்கவும் இல்லை என்று 

அவனுக்கு புரியாது..

வாழ்வின் நிச்சயமற்ற கணத்தில் 

அவன் புதைகிறான்...

நான் மிதக்கிறேன்...

இவ்வளவு தான் வாழ்க்கை என்று 

அங்கே மூழ்கிக் கொண்டு இருக்கும் 

அவனிடம் விரைவாக யாரேனும் 

சென்று சொல்லுங்கள்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 10/01/25/வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...