ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 31 ஜூலை, 2024

வயநாட்டில் இயற்கையின் எச்சம்...




இயற்கை அன்னையின் 
பயங்கர கோபத்தில் 
சிதைந்த வீட்டில் 
சிதையாத எச்சமாக 
ஒரு அன்பான குடும்பம் 
புகைப்பட வடிவில் 
அதே பூமியில் 
பெரும் ஏக்கத்தோடு 
தஞ்சம் அடைகிறது ...
அந்த பூமி மௌனமான 
கண்ணீரோடு 
தாய்மை குணம் மாறாமல் 
அணைத்துக் கொண்டு 
குலுங்கி குலுங்கி அழுவதை 
இங்கே யார் அறியக் கூடும்?

#வயநாடு

#இயற்கையின்கோபம்.

#இளையவேணிகிருஷ்ணா.

31/07/24/புதன் கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...