ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 9 ஜூலை, 2024

இரவு கவிதை: அந்த புகைப்படத்தின் நினைவலைகள்...


அந்த புகைப்பட கருவியின் 

உள்ளே உள்ள முகங்கள் 

ஆயிரம் ஆயிரம் கதைகளை 

சொல்லி நினைவலைகளை 

ஒரு இசையை போல மீட்ட மீட்ட 

அதனோடு தொடர்புடையவர் 

கண்களில் இருந்து வழியும் 

கண்ணீரோடு பேச்சற்ற மௌனியாக 

அங்கே அமர்ந்து 

அந்த புகைப்படத்தை 

பார்க்க முடியாமல் கண்ணீர் 

திரையிட்டு மறைக்க 

பார்த்துக் கொண்டு இருக்கும் ...

அந்த மனிதர் தான் 

அந்த புகைப்பட கலைஞருக்கு 

பெரும் விருதாக கைகளில் 

கனத்து நிற்கிறது...

#இரவுகவிதை.

#புகைப்படம்சொல்லும்கதை.

நாள் 09/07/24/செவ்வாய் கிழமை.

முன்னிரவு பொழுது 10:48.

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...