ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 24 ஜூன், 2024

இரவெனும் நதிக் கரையில்...


இப்படியே நேரத்தை 

கடத்தி விடுவேன்...

இந்த இரவெனும் 

நதிக் கரையில் ...

என்னோடு பிரபஞ்சத்தின் 

ரகசியத்தை பற்றி 

உரையாட ஒரு நிலவு...

யாரை பற்றியும் 

குறைப்பட்டுக் கொள்ளாத நட்பாக 

சில விண்மீன்கள் ...

 பேரன்பின் ஊற்றை பொழியும் 

இளம் தென்றல்...

காதிற்கு தேனமதுமாக 

இரவு பூச்சிகளின் 

ரகசிய மொழிகள்...

இது போதும் எனக்கு 

பகல் எனும் பொழுதில் 

பெரும் அரக்கர்கள் என் மீது பொழிந்த 

வன்மத்தின் ரணத்தின் 

வலியை மறக்க!

#இரவு கவிதை 🍁 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் :24/06/24/திங்கட்கிழமை.

முன்னிரவு 9:37.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...