ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 23 ஜூலை, 2025

மர்ம வீடு பாகம் (1)


அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்களால் நம்பப்பட்டு வந்தாலும் நான் அங்கே தான் வசிக்க ஆயத்தம் ஆனேன்.. ஏன் என்று நீங்கள் கேட்டால் நான் சொல்லும் பதில் உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாதாக தான் இருக்கும்.. ஏனெனில் அந்த மரத்தின் அற்புதமான படர்ந்து விரிந்து இருந்த வசீகரம் மட்டும் அல்ல... அங்கே எப்போதும் குடிக் கொண்டு இருக்கும் பலவிதமான பறவைகள்... அதன் வாழ்வியல் என்று கூட சொல்லலாம்.தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்வியல் சூழலில் சலித்து கொஞ்சம் எந்தவித தொந்தரவும் இல்லாமல் நான் வசிக்க வேண்டும் என்று நினைத்தபோது தான் இந்த வீடு பற்றிய தகவல் கிடைத்தது... உடனே நீங்கள் கேட்கலாம்..நீ மனநிலை பிறழ்வு உடையவரா என்று.. ஆமாம் என்று தான் வைத்துக் கொள்ளுங்களேன்.. உங்கள் பார்வையில் நான் மனநிலை பிறழ்ந்தவர் தான்... நான் குடியேறி தற்போது சில நாட்கள் ஆகிறது.. ஆனால் அங்கே இந்த மக்கள் குறிப்பிட்டதை போல எல்லாம் ஒரு அமானுஷ்ய நிகழ்வுகளும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.. நான் எனது அன்றாட பணிகளில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாழ்ந்து வந்தேன்... அந்த வீட்டிற்கு சொந்தமாக காணி நிலம் ஒன்றும் இருந்தது... அந்த நிலத்தோடு தான் இந்த வீட்டையும் எனக்கு வசிக்க விட்டார்கள்.. அந்த நிலத்தை கொஞ்சம் சீர்திருத்தம் செய்து காய்கறி செடிகள் நடலாம் என்று திட்டமிட்டு அதை உழுது தயாராக வைக்க இன்று ஆளை கூப்பிட வேண்டும் என்று நினைத்து தற்போது எனது காலைப் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறேன்...இதோ முடிந்தது.. பசியும் என்னை கொஞ்சம் கண்டுக் கொள்ளேன் என்று உரிமையோடு சிணுங்கியது..காலை உணவாக தயாரித்து வைத்து இருந்த இட்லியும் அதற்கு தொட்டுக் கொள்ள வெங்காய சட்னியும் தட்டில் போட்டு எடுத்துக் கொண்டு அந்த மரத்தின் அடியில் உள்ள கல்லுக் கட்டில் அமர்ந்து மிகவும் நிதானமாக ரசித்து ருசித்துக் கொண்டே அந்த பறவைகளின் அற்புதமான குரலில் உரையாடலையும் கேட்டு ரசித்தேன்..என்ன அற்புதமான உலகம் இந்த இறைவன் படைத்து வைத்து இருக்கிறான்.. இந்த அற்புதத்தை தவற விட்டு விட்டு எங்கே இந்த மனிதர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக நினைத்தபடியே நான் சாப்பிட்டு முடிக்கவும் அங்கே நான் எதிர்பார்த்த உழவுக்கு டிராக்டரோடு ஆள் வரவும் சரியாக இருந்தது..என்ன அம்மா சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார் அந்த மனிதர்.. ஆமாம் சாப்பிட்டு முடித்து விட்டேன்.. வாருங்கள் நீங்களும் சாப்பிடலாம் என்றேன்... அவர் சிரித்துக்கொண்டே அதெல்லாம் வேண்டாம் மா.. நான் முதலில் உழவை முடித்து விட்டு வருகிறேன்.. பிறகு தங்களது உணவை ருசி பார்க்கிறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.. நானும் சரி என்று ஆமோதித்து தட்டை கழுவி வைத்து விட்டு அவரோடு பேசிக் கொண்டே கழனிக்கு நடந்தேன்... 

அடுத்த நிகழ்வில் சந்திப்போம்...

அந்த மர்ம வீட்டில் நேயர்களே 🙏.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...