அந்த சொற்பமான நொடிகளில்
எந்த சுவடும் இல்லாமல்
தாம் வந்து சென்ற தடயம் இல்லாமல்
அழித்து விட்டு
மணலில் வீடு கட்டி
விளையாடிய சிறுமி
தாமே அதை கலைத்து விட்டு
மகிழ்ந்து கைகொட்டி
குதூகலம் அடைவதை போல
என் கனவுக்குள் பிரகாசமாக
அதிவேகமாக பிரவேசித்து
பிறகு நீ எங்கோ மறைந்து
போகிறாய் என் இனிய காதல்
கனவே...
நீ எங்கே சென்றாய் என்று
இந்த பிரபஞ்சத்தின்
மூலைமுடுக்கெல்லாம் விடாமல்
தேடி அலைந்து களைத்து அமைதி அடைகிறேன் நான்
உன் கனவின் சுவடை
எந்த நதியிலும் கரைக்க மனம் இல்லாமல்...
#இளையவேணி கிருஷ்ணா
நாள் 14/07/25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக