ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 14 ஜூலை, 2025

பெரும் மௌனதிரளில் மூழ்கி...


இன்றைய அலைபேசியின்

அத்தனை எனக்கான தரவுகளையும் 

சரிபார்த்து 

முடித்த பின்பும் நான் 

ஏதோவொரு சோர்வோடு 

உறங்க போகிறேன்...

உள்ளங்கையில் உலகமென 

உலகத்தின் அத்தனை 

விஷயங்களும் 

நான் எங்கே சென்றாலும் என்னோடு 

பிரயாணம் செய்தபோதும் 

என் கேள்விக்கான பதிலாக

உன் குறுஞ்செய்தி 

என் அலைபேசியில் இல்லாத 

வெறுமையை பூர்த்தி 

செய்யாத போது 

உலகம் என் உள்ளங்கையை 

பெரும் பிரயத்தனப்பட்டு

மென்மையான பூக்களால் 

அலங்கரித்து என்ன 

ஆகி விடப்போகிறது என்று 

நான் இந்த உலகத்தை 

கேள்வி கேட்க ...

இந்த உலகமோ 

பெரும் மௌன திரளில் மூழ்கி 

என்னிடம் இருந்து தப்பிக்க 

பார்க்கிறது...

நான் என் செய்வேன்

சொல் என் பெரும் காதல் நெஞ்சமே...

#இளையவேணிகிருஷ்ணா

நாள்:14/07/25/திங்கட்கிழமை.

14/07/25/திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...