ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

ஒரு வழிப்போக்கனின் கனவு....

 

அந்த வழிப்போக்கனின் 

அத்தனை கனவுகளையும் 

மௌனமாக குறித்துக் கொள்கிறது 

அந்த நெடுஞ்சாலை...

அவன் கனவுகளில் ஒன்றிரண்டு 

ஏதேனும் சிதறி விழுவதை 

எவர் கால்களும் படாமல் 

காத்து கரை சேர்க்கிறது

ஒரு ஓரமாக அந்த காலம் ...

இங்கே பழுதடைந்த கனவுகளை 

தன் போக்கில் ஓடும் அந்த நதியில் 

கரைத்து விட்டு சலனமற்று 

பயணிக்கிறான் 

அந்த வழிப்போக்கன் ...

இங்கே அவன் போகும் சாலையோ 

பெரும் துயரத்தோடு அவனது 

கனவுகளை சுமந்த கால்களை 

வருடிக் கொடுத்து மௌனமாக 

தேம்பி அழுகிறது...

இங்கே எதையும் கண்டுக் கொள்ள 

மனமில்லாமல் அவன் போகிறான்

நெடுந்தூர பயணமாக...

எங்கே என்று மட்டும் 

அந்த வழிபோக்கனிடம் மட்டும் அல்ல 

அந்த சாலையிடம் கூட 

கேட்டு வைக்காதீர்கள்...

ஏனெனில் 

உறவுகளில் சில அபூர்வமானது..

அதில் அந்த நெடுஞ்சாலையும் 

அந்த வழிப்போக்கனின் உறவும் 

அதீத அபூர்வமானது...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள 

இலட்சோப இலட்சம் கோடி 

மனிதர்களின் உறவுகளையும் விட 

இவர்கள் உறவு மகா உத்தமமானது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 25/02/25/செவ்வாய் கிழமை.

நடுநிசி நெருங்கிய வேளையில்...




உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை 🎻


வணக்கம் நேயர்களே 🎻 🙏 🤝.

வாழ்வின் பிரச்சினைகள் இங்கே நம்மோடு பயணிப்பது ஏராளம் தற்போதைய சூழலில் இன்னும் இன்னும் அதிகம்...அவற்றை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை ஓஷோவின் கதையின் மூலம் உணர்ந்துக் கொள்ளலாம் நேயர்களே..கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎉 🎻.https://youtu.be/yTv_vCIVi1E?si=NySdejcFXkRxnY0y

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் பிரபு வேலூர் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉.

இந்த நிகழ்ச்சி படைப்பாளிகளின் படைப்புகளை சிறப்பிக்கும் வகையில் எடுத்துச் செல்கிறோம் நேயர்களே 🙏🎻🎉.

அந்த வகையில் இன்றைய படைப்பாளி #கவிஞர்பிரபுவேலூரில் இருந்து அவரது கவிதை தொகுப்பு கொடுத்து சிறப்பிக்கிறார்...

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள்... தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவியுங்கள் நேயர்களே நன்றி 🙏🎻🎉.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 24 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை:எது உண்மையான மகிழ்ச்சி 🎉

 


உண்மையான மகிழ்ச்சி என்பது எது என்று புரியாமல் தான் இங்கே பல வழிகளில் நாம் தேடி அலைகிறோம் அல்லவா நேயர்களே...அந்த உண்மையான மகிழ்ச்சி எதில் எங்கே உள்ளது என்று அற்புதமாக விளக்கி உள்ளார் ஓஷோ அவர்கள்..அவர் பார்வையில் என்ன சொல்ல வருகிறார் என்று கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻 🙏 😍.

https://youtu.be/giYQJJY2nAE?si=AndNnp_E8mB6kD2p

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🙏🎉🎻.


இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இணைகிறார் படைப்பாளி #கவிஞர்நிஷாராஜேஷ் அவர்கள்... 🎉

கவிஞர் நிஷா ராஜேஷ் அவர்கள் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு களியுங்கள் 🎉🎻.

இது படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேயர்களே 🙏🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

மாயையின் சுவாசத்தின் வீரியத்தை...


அந்த எத்தனையோ 

மாபெரும் சாதனையாளரின் உடலும் 

புகழ் மனிதனின் உடலும் 

தோற்றுக் கொண்டு தான் 

இருக்கிறது... 

அந்த மயானத்தில் எரியும் தணலில்!

இங்கே அந்த தணலோ 

எந்த மனிதனின் சாதனையையோ 

புகழையோ 

உரிமைக் கொண்டாடாமல் 

எந்தவித அகங்காரமும் இல்லாமல் 

அமைதியாக தின்று தீர்க்கிறது 

அந்த உடல் எனும் ரதத்தை...

இங்கே மாயையின் 

சுவாசத்தின் வீரியத்தை 

யாரும் கொல்ல இயலாமல் 

இங்கும் அங்கும் அலைந்து 

திரிகிறது...

நானோ இதை எல்லாம் 

வேடிக்கை பார்த்து 

பொழுதை போக்கும் 

சாதாரண மனுஷியாகின்றேன்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்23/02/25.

அந்தி மாலைப் பொழுதில்...

வலிகளையும் தாண்டி மௌனமாக நகர்கிறது வாழ்க்கை...


வலிகள் தான் பெரும்பாலான 

வாழ்க்கை பயணங்களை 

நிர்ணயிக்கின்றது!

அந்த வலிகளையும் தாண்டி 

மௌனமாக நகர்கிறது...

இங்கே வாழ்க்கை!

எதுவும் புரிந்துக் கொள்ள 

முடியாத சூழலில் சில...

எதையும் உணர முடியாத 

சூழலில் பல!

இங்கே எதுவாயினும் 

எனை தாக்காத துயரென்று 

இங்கே ஏதும் இல்லை!

வாழ்க்கை எனை மயான அமைதிக்கு 

மெல்ல மெல்ல எடுத்து 

செல்வதை மட்டும் 

உணர முடிகிறது...

இங்கே அந்த மாயையின் 

பிடியில் இருந்து 

நழுவி போக வழி தேடி அலையும்

சிறகொடிந்த பறவை நான்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/02/25.

அந்திமாலை நேரம்...

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻

 


இன்றைய உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் யார் உண்மையான ஞானி என்பதை ஓஷோ சொன்ன கதை மூலம் உணரலாம் நேயர்களே 🙏 கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🎻 🙏 🦋 

https://youtu.be/MaH8gf1Yi20?si=IMz3Ed8MJlDfyATr

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில்


இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் ஜேபி நீக்கிழார் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻.

இந்த நிகழ்ச்சி படைப்பாளிகளின் படைப்புகளை சிறப்பிக்கும் விதமாக வார நாட்களில் தினமும் இந்திய நேரம் ஒன்பது மணி முதல் பத்து மணி வரை கேட்டு ரசிக்கலாம்... 🙏🎉🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 20 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை 🎻

 


உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று எல்லா ஆசையும் வீண் தான் -ஓஷோவின் பார்வையில் எப்படி என்று தெரிந்துக் கொள்ள கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎉 🎻.

https://youtu.be/r25DEQeP5QU?si=lewWuLh5Fn6Dudch

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் ஜேபிநீக்கிழார் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 19 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻

 


உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று உங்கள் கிருஷ்ணா எப்.எம் சேனலில் பயத்தினால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லும் கதை நேயர்களே 🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 https://youtu.be/cLLTy3TZ-m4?si=83Xt0mAYqn806K8k

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் #ஜேபிநீக்கிழார் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏🎻🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சி//சிரிப்பு பிரார்த்தனையை விட மேலானது


வணக்கம் நேயர்களே 🙏.

இன்றைய உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் சிரிப்பு எப்படி பிரார்த்தனையை விட மேலானதாக இருக்க முடியும் என்பதை ஓஷோ தனது பாணியில் மிகவும் அற்புதமாக விளக்குகிறார் கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻 🦋 💫 https://youtu.be/XyBSuSLTR2Q?si=abEvvwphXe9-AGYB

அந்த ஓரிரு வார்த்தைகளில் தான்...


அந்த ஓரிரு வார்த்தைகளில் தான் 

எல்லாமே உயிர்ப்போடு 

பயணிக்கிறது...

அந்த ஓரிரு வார்த்தைகளில் தான் 

எல்லாமே முடிந்தும் விடுகிறது...

இங்கே வார்த்தைகளால் 

தீர்மானிக்க முடியாத 

நிகழ்வொன்றில் தான் 

நான் அகப்பட்டு கிடக்கிறேன்...

அந்த நிகழ்வும் சத்தமில்லாமல் 

எந்த சலனமும் இல்லாமல் 

பெரும் காதல் கொண்டு 

பயணிக்கிறது 

மிகவும் ரகசியமாக ...

அங்கே பலகோடி பேரை 

வார்த்தைகள் வதம் செய்து 

இளைப்பாறுகிறது...

இங்கே நானும் அந்த மௌனமும் 

அந்த வதம் செய்யப்பட்ட 

பலகோடி பேரை புதைப்பதற்காக

இடம் தேடி அலைகிறோம்...

அந்த வார்த்தைகளால் 

வதம் செய்யப்பட்ட மனிதர்களின் 

உடல்கள் மீது எங்கள் கால்கள் 

கூச கூச நடந்து ...

எங்கள் இருவரையும் 

அந்த தேவர்களின் பிள்ளைகள் 

என்று வர்ணிக்கிறது ஒரு அசரீரி 

நாங்களோ அதை செவி மடுத்தும்

பெருமைக் கொள்ள வழியில்லாமல் 

செய்வதறியாது திரிகிறோம் ...

கண்களில் நீர் வழிய வழிய 

இங்கே இறந்து கிடக்கும் 

இத்தனை கோடி பேருக்குமான 

இடத்தை தேடி அலைந்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/02/25/செவ்வாய் கிழமை.

அந்தி மாலைப் பொழுதில்...



திங்கள், 17 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻🙏


வணக்கம் நேயர்களே 🙏. உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று உங்கள் கிருஷ்ணா எப்.எம் சேனலில் எறும்பு உணர்த்தும் வாழ்வியல் தத்துவம் கதை...இந்த கதையை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 😊 🤝.https://youtu.be/F3dcowSLo5k?si=UdgrCXAnQtulichv

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி நேயர்களே 🎻

 


வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #வழிப்போக்கன் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎉🎻✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி 🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை 🎻

 


உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று வெகுளித்தனமான விறகுவெட்டி ஞானி ஒருவர் மூலம் எப்படி ஞானம் அடைந்தார் என்பதை அழகாக விளக்கும் கதை நேயர்களே..கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி 🙏. கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் 🎻 🙏.

https://youtu.be/XjIcGbn-25E?si=aWdQ9iRQdPpb-kTc

அந்த எண்ணற்ற பயணங்களில்...


அந்த எண்ணற்ற பயணங்கள் தான் 

எனை வேறு ஒரு உலகத்திற்கு 

அழைத்துச் சென்றது...

என்னோடு பயணிப்பவர்கள் 

எத்தனையோ கதைகளை 

என்னோடு கதைத்து என் பயணத்தை 

சுவாரஸ்யமாக்குகிறார்கள்...

நான் எத்தனையோ கதைகளை 

கேட்டு விட்டு 

இறங்கும் வழியில் அவர்கள் கதைகளை 

அந்த சாலையிலேயே விட்டு விட்டு 

சலனமின்றி பயணிப்பதை பார்த்து 

அந்த காலம் எனை இரக்கமின்றி 

பயணிப்பதாக கொஞ்சம் 

குறைப்பட்டுக் கொண்டது!

நானோ இதில் என் தவறு ஏதுமில்லை!

நான் எப்போதும் நான் தான்...

என் உலகமும் வேறு தான்...

அதுசரி அவர்கள் கதைகளுக்கு 

என்னிடம் ஏதும் தீர்வு தர சொல்லி 

இந்த பிரபஞ்சம் என்னிடம் 

உத்தரவிடவில்லையே 

என்றேன் அதுவும் சரிதான் என்று 

அந்த காலமும் மெல்லிய 

புன்னகையுடன் 

விடைப்பெற்றது நானும் தான்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/02/25/ஞாயிற்றுக்கிழமை.

சனி, 15 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻✨🎉


உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சி மூலம் பல்வேறு வாழ்வியல் சார்ந்த கருத்துக்கள் கொண்ட சிந்தனை கதைகளை மற்றும் சிந்தனை தூண்டும் விஷயங்களை பகிர்ந்து வருகிறோம் நேயர்களே 🎻 🙏.

கீழேயுள்ள லிங்கில் இன்றைய நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 https://youtu.be/j_ep0mQ2NT4?si=bB5PrYnsaxRAG0LZ

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻

 


இன்றைய உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் பிரச்சினை தீர்க்கும் வழிகள் பற்றி அற்புதமான நிகழ்வுகள் பற்றிய கதை நேயர்களே 🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏.

https://youtu.be/FTaQY7Ci_D8?si=CRaBkyOT-Wg9gmHN

வியாழன், 13 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻🙏

 


உறங்கும் முன் ஒரு சிந்தனை கதையில் இன்று இந்த உலகம் மகிழ்ச்சியாக அமைய நம்மில் இருந்து மாற்றம் தொடங்க வேண்டும் என்பதை உணர்த்தும் கதை நேயர்களே 🙏.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🙏 🤝 😊.https://youtu.be/Vru52OKP16k?si=uUWm6-iTYpuv8zn9

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் #ராஜா வெள்ளூர் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் 🙏.

இது படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேயர்களே 🙏.

உங்களுக்கு தெரிந்த படைப்பாளிகளை நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்... அவர்களின் அற்புதமான படைப்புகளை உலகம் முழுவதும் நாங்கள் வானலை யின் வழியாக எடுத்து செல்ல காத்திருக்கிறோம் நேயர்களே 🙏🎉🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🙏🎻🦋.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 12 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻🙏🥳

 


தினமும் உறங்கும் முன் ஒரு நல்ல சிந்தனை தூண்டும் கதைகளை கேட்டு விட்டு உறங்குவதால் மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியாக உறங்க முடியும் நேயர்களே 🙏.

மேலும் இப்படிப்பட்ட கதைகளை கேட்க நீங்கள் கீழேயுள்ள லிங்கில் சென்று கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏. https://youtu.be/q_6UDergNMU?si=dqZs_66AjJ8lll7t

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் #ராஜா வெள்ளூர் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் 🙏.

இது படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேயர்களே 🙏.

உங்களுக்கு தெரிந்த படைப்பாளிகளை நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்... அவர்களின் அற்புதமான படைப்புகளை உலகம் முழுவதும் நாங்கள் வானலை யின் வழியாக எடுத்து செல்ல காத்திருக்கிறோம் நேயர்களே 🙏🎉🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🙏🎻🦋.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏.

ஒரு எருமையின் கைலாய முறையீடு மூலம் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டிய தத்துவம் இந்த கதையின் மூலம் உணர்ந்துக் கொள்ளலாம் நேயர்களே 🙏.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🤝🦅💫🦋 நன்றி 🙏.https://youtu.be/65ezTqPxybE?si=mlARxWXYBVLaV6g_

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #கவிஞர் #ராஜாவெள்ளூர் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

இது இரவை இனிமையாக்கும் சுகமான இசைப் பயண வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி 🎻🎻🎻.

கீழேயுள்ள லிங்கில் வானொலி நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

அந்த புழுதிக் காற்றில் தான்...

 


அந்த புழுதிக் காற்றில் தான் 

என் சுவாசத்தின் 

தீரா காதல் ஒன்று அலைந்து 

திரிகிறது...

எந்நேரமும் அது இந்த பிரபஞ்சத்தின் 

ஒரு மூலையை 

தாக்கி விடவும் கூடும்...

அந்த தாக்குதலின் எச்சரிக்கை மட்டுமே 

இங்கே முன்னறிவிப்பு செய்ய இயலும்...

அதன் தீவிரத்தை இங்கே 

யார் அறியக் கூடும்?

ஒரு வேளை அதன் ஆக்ரோஷத்தை எதிர் கொள்ள இயலாமல் 

இந்த பிரபஞ்சம் அழிந்து விடவும் கூடும்...

அதுவும் இங்கே யார் 

அறியக் கூடும்?

ஒரு வேளை ஏதேனும் அதிருஷ்டம் இருந்து 

அந்த தாக்குதலில் இருந்து 

தப்பித்த எச்சம் ஒன்று 

இருந்தால் அது என் காதலின் 

தீவிரத்தை 

எதிர் வரும் சந்ததியினருக்கு 

உணர்வுப் பூர்வமாக 

கடத்தி விட்டு 

தான் பேரமைதி கொண்டு 

இந்த பிரபஞ்சத்தில் மூழ்கி 

தான் வந்த பணியை செய்து 

முடித்து விட்ட பேரமைதியில்

நீங்கா துயில் கொண்டு 

தன்னை 

ஆசுவாசப்படுத்திக்

கொள்ளும் போது 

என் சுவாசத்தின் தீரா காதலும் பேரமைதி கொண்டு 

இந்த பிரபஞ்சத்தில் உயிரோட்டத்தை 

மீண்டும் புதுப்பித்துக் கொண்டு 

உற்சாகமாக பெரும் காதலோடு 

நடைப் போட்டு 

புது யுகத்தை துவக்கி 

ஏதும் அறியாதது போல 

புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டே 

அதோ அந்த காலமெனும் சாலையில் நடந்து செல்லும்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 11/02/24/செவ்வாய் கிழமை.

திங்கள், 10 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை 🙏🎉🎻.

 


தினமும் உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் ஒலிபரப்பு ஆகும் கதையை கேட்டு விட்டு உறங்குவதால் மன அழுத்தம் குறைந்து நிம்மதியாக உறங்கலாம் நேயர்களே 🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🤝 🙏.

https://youtu.be/YjlBIApdyXw?si=A_RaGUkSZHdVMClO

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் ரூபன் ராஜசேகரன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை

 


உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியை நீங்கள் கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் நேயர்களே 🎻🙏🎻.

https://youtu.be/_oq2gg9NKqg?si=F6sIbCFCoj0SUmCe

வியாழன், 6 பிப்ரவரி, 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி

 


வணக்கம் நேயர்களே 🙏

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் #கவிதைராஜா அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

இது இரவை இனிமையாக்கும் சுகமான இசை பயணம் 🎻🎉🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் 🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

மனிதர்கள் காட்சி பொருளா??


அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் நமது பிரஜைகள் என்கின்ற உணர்வு கூட இல்லாத ஜடத்தனமான மனிதர்கள் அரசியலில் இருப்பதே மிகவும் துரதிர்ஷ்டவசமான வெட்கக்கேடான விஷயம் என்பதை உணராதவர்களுக்காக தான் பெரியார் அவ்வளவு விசயத்தை பகுத்தறிவை சுயமரியாதையை சொல்லி இருக்கிறார் என்பதை உணராதவரை இங்கே எதுவும் காட்சிப் பொருள் தான் மனிதர்கள் உட்பட...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 06/02/24/வியாழக்கிழமை.

புதன், 5 பிப்ரவரி, 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி

 வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.


இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இனிமையான பாடல்களோடு இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻.

இதில் படைப்பாளி கவிஞர் #கவிதைராஜா அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻❤️.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎉🎻🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🙏.

இது இரவை இனிமையாக்கும் சுகமான பாடல்களோடு படைப்பாளிகளின் படைப்புகளை பாடல்கள் இடை இடையே வாசித்து சிறப்பிக்கும் நிகழ்ச்சி நேயர்களே 🙏🎉🎻.

தங்களது மேலான ஆதரவை படைப்பாளிகளுக்கு கொடுத்து ஊக்குவியுங்கள் 🙏.

வழக்கம் போல கீழே கமெண்ட் பகுதியில் வானொலி லிங்க் 🙏🎉https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/🎻.

நானும் அந்த கிழிந்த சட்டையின் காதலும்...

 


நீண்ட நாள் என் மேனியோடு

ஒட்டி உறவாடிய அந்த சட்டை 

நான் விடை பெறட்டுமா என்று 

என்னிடம் மெல்லிய குரலில் 

தனது கண்ணீரை அடக்கி கேட்கிறது...

நானோ அதை பிரிய மனமில்லாமல் 

இன்னும் ஒரு நாள் 

என்னோடு சேர்ந்து 

பயணிக்கக் கூடாதா என்று 

ஏக்கமாக கேட்கிறேன்...

அதுவோ இல்லை இல்லை என்று 

மறுத்து விட்டு 

எனை நீ 

பிரிந்து விடுவது தான் 

நான் உன் பெரும் காதலுக்கு 

கௌரவத்திற்கு 

செய்யும் மரியாதை என்று 

மேலும் கிழிந்து தன்னை 

தனிமைப்படுத்திக் கொண்டு

என் வீட்டின் 

ஒரு மூலையில் உள்ள 

அட்டைப் பெட்டியில் 

அடங்கிக் கொள்கிறது...

நான் அந்த புதிய சட்டையை 

எந்தவித தொந்தரவும் இல்லாமல் 

காதலித்து 

என் மேனியோடு 

அணைத்துக் கொள்ள வேண்டும் என்று 

அது நினைத்திருக்கக் கூடும்...

இங்கே எது எப்படியோ 

அந்த பழைய காதலியை 

மறப்பது போல தான் 

அந்த பிரிவின் வலியும்... 

அதன் பிரிவின் வலியை 

கண்ணீரோடு சுமந்து 

பயணிக்கிறேன் இங்கே நான்...

அங்கேயோ

 பலபேர் இதோ பார் 

இவனுக்கு வந்த வாழ்வு என்று 

ஏசுகிறது...

இங்கே நானும் அந்த கிழிந்த 

பழைய சட்டையும் கொண்ட காதலை 

யார் உண்மையில் 

அறியக் கூடும்???

இங்கே காதல் என்றாலே 

கருணையற்று தான் 

போக வேண்டும் என்ற விதியோ??

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/02/25/செவ்வாய் கிழமை.

அந்தி மாலைப் பொழுதில்...

திங்கள், 3 பிப்ரவரி, 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் #கவிதைராஜா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.

இது இரவை இனிமையாக்கும் சுகமான இசையோடு சங்கமிக்கும் நேரம் 🎉🎻🎉.

வானொலி லிங்க் கீழே 

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

என் மீது பெரும் காதலோடு...


நான் அப்படி தான் என்று 

சொன்னால் 

நீ அப்படியா என்கிறார்கள்...

நான் அப்படி எல்லாம் இல்லை 

என்று சொன்னால் 

நீ அப்படி தான் என்று 

பிடிவாதமாக என்னிடம் 

பலமணி நேரங்கள் 

சண்டை இடுகிறார்கள்...

இவர்கள் என்னிடம் 

இப்படி நேரத்தை 

திருடிக் கொண்டு இருக்க 

நான் எழுத எடுத்த வைத்த 

காகிதம் என்னிடம் 

முறைத்து கோபமாக 

பறந்து போகிறது...

நான் என்ன செய்ய இயலும் 

என்று அப்படியே அமர்ந்து கொண்டு 

இருக்கும் போது 

எங்கிருந்தோ வந்த 

தேநீரின் வாசனை மட்டுமே 

என்னை பெரும் காதலோடு 

அங்கே யாரிடமோ சொல்லி 

அனுப்புகிறது 

என்னை அந்த பெரும் காதலின் 

உணர்வு மாறாமல் 

வரச் சொல்லி வழி மேல் 

விழி வைத்து 

காத்திருக்கிறது...

நான் அந்த அழைப்பை ஏற்று 

திடீரென வந்த பெரும் மழையில் 

நனைந்து செல்கிறேன்...

அந்த பெரும் காதலின் உணர்வை 

என் இதயத்தில் தேக்கி வைத்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 03/02/25/திங்கட்கிழமை.

அந்தி மயங்கும் வேளையில்...

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம்...

காற்றில் தன் தேகத்திற்கு  எந்த பிடிமானமும் கிடைக்காதா  என்று  தேடி அலைகிறது  அந்த சிறிய கொடி... வெகுநேரம் அந்த கொடியின்  தேடலில்  புரிந்துக்...