ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 19 அக்டோபர், 2019

நெஞ்சம் தேடுதே!

நீயோ விடைபெற்று போகவே
விரைவாக எண்ணுகிறாய்!
நானோ உன்னை விட
மனம் இல்லாமல் உன்கைகளை
இறுக பிடித்து மன்றாடுகிறேன்!
நீயோ எனது கைகளை உதறிதள்ளவும்
மனம் இல்லாமல்
எனது கைகளில்
சிறை இருக்கவும் மனம் இல்லாமல்
சிக்கி தவிப்பதை
நான் உன்னை பார்க்காவிட்டாலும்
கண்ணீரோடு உணர்கிறேன்!
இப்போதும் ஒன்றும்
கெட்டுப்போகவில்லை!
உனது அகங்காரத்தை மறந்து
அடங்கிக்கொள்ளடி
என் கையணைப்பில் வந்து
என் நெஞ்சம்
தேடுகிறதடி உனது மஞ்சத்தை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...