ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

நம்பகத்தன்மை

அன்பர்களே வணக்கம்.
                  இன்று நாம் பார்க்க இருப்பது நம்பகத்தன்மை.என்ன நேயர்களே இதனுடைய பொருளை நாம் பார்ப்போமா?.இன்றைய உலகத்தில் நமது நம்பிக்கை என்பது மனிதர்கள் மற்றும்  பொருள்கள் மீது தான் உள்ளது. ஆனால் நாம் நம்பும் அளவிற்கு அந்த பொருளோ அல்லது மனிதர்களோ எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது என்பது நமது கேள்விகுறி.ஏன் இந்த நிலை என்று யோசித்து பார்த்தால் கொடுத்த வாக்கை காப்பாற்ற அக்கறை இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.
        அந்த காலத்தில் வாக்கு கொடுத்தால் அந்த வாக்கிற்காக உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவார்கள்.ஏனெனில் வாக்கு என்பது உயிருக்கு நிகராக இருந்தது. அதனால் ஒருவர் வாக்கு கொடுத்தால் அதை நம்பி சில நடவடிக்கை கூட எடுக்காமல் தள்ளி போட்டார்கள். ஆனால் இன்று அது ஒரு தவறான செயல் அதாவது கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருப்பது தவறான செயல் என்று கூட நினைக்க மறக்கிறார்கள்.இது தான் வேதனையின் உச்சம்.
        கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருப்பது வாக்கு தவறுவது என்பது மட்டும் அல்ல. ஒருவருக்கு இழைக்கப்படும் நீதியும் கூட என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
               நம்பகத்தன்மை என்பது எப்போதும் தனிமனிதனோடு மட்டும் சம்பந்தப்பட்ட விசயம் இல்லை. அது நாம் வாழும் சமுதாயத்தோடு சம்பந்தப்பட்ட விசயம். ஏனெனில் சமுதாயம் என்பது ஒழுக்கத்தையும் நம்பகத்தன்மையையும் அடிப்படையாகக்கொண்டது.
   இன்று நம் சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் மிக மோசமான சமுதாயத்தை நாம் நம்மையும் அறியாமல் ஊக்கப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
     முதலில் நமது வீட்டில் குழந்தைகளுக்கு சொன்னால் சொன்ன வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்கிற பழக்கத்தை கொண்டு வரவேண்டும். ஏனெனில் வீட்டில் இருந்து தான் எந்த நல்ல மற்றும் மோசமான விசயங்கள் ஆரம்பம் ஆகிறது.
      எப்பாடுபட்டாவது நம் மேல் எவர் வைக்கும் நம்பகத்தன்மையையும் நாம் சீர்குழைத்து விடக்கூடாது. இன்று ஒரு பொருளை விற்கும் விற்பனை பிரதிநிதிகள் தமது விற்பனை நடந்தால் சரி என்றே இருக்கிறார்கள். அந்த பொருள் எந்தளவுக்கு  சரியானது நம்பகத்தன்மை உடையது என்று தெரியாமலே அல்லது ஆராயாமலே விற்பனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விற்பதால் மக்கள் நல்ல பொருட்களை கூட சந்தேகத்தோடு  பார்க்கும் நிலை இன்று வந்து விட்டது.
        ஒரு நிறுவனம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து தொடங்கினால் நிச்சயமாக அழிவை சந்தித்தே தீரும். அது நிறைய நாட்கள் கண்டிப்பாக தாக்குபிடிக்காது.இதை நினைவில் கொண்டாலே ஒவ்வொரு நிறுவனமும் நம்பகத்தன்மை எவ்வளவு முக்கியமானது என்று உணர தொடங்கி விடும்.
     மனிதர்களும் நம்பகத்தன்மை காப்பாற்றும் அளவிற்கு தான் அவர்கள் பெயர் புகழ் இந்த பூமியில் நிலைத்து நிற்கும். அந்த மனிதன் இறந்தும் வாழ்வான். அதை விடுத்து சொல்லும் செயலும் வேறாகும் போது நம்பகத்தன்மை அங்கே தீயிலிட்ட தூசு போல பொசுங்கி விடும்.
           ஆதலால் நேயர்களே நீங்கள் உங்கள் நம்பகத்தன்மையை சோதிக்கும் காலம் நெருங்கி விட்டது.நீங்கள் உங்கள் நம்பகத்தன்மையை புதுப்பித்து புடம் போட்ட தங்கம் போல கண்டிப்பாக ஜொலிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
            சரி நேயர்களே நீங்கள் எனது அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு நான் உங்கள் நம்பகத்தன்மையை சோதிக்க வருகிறேன். மீண்டும் சந்திப்போமா நேயர்களே.
     ஆனந்தமான வாழ்க்கை என்பது அடுத்தவர்களின் நம்பிக்கையை எந்தளவுக்கு காப்பீர்கள் அல்லது காத்து வந்துள்ளீர்கள் என்பதில் உள்ளது.
   சரி நேயர்களே அடுத்த பதிவில் தங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...