ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 17 ஜனவரி, 2022

பேரமைதி

 எந்தவித சலனத்தையும்

சுமக்காமல் 

அந்த சாலையில் பயணிக்கிறேன்!

இந்த பிரபஞ்சம்

தன்னுள் அமைதியை

மட்டுமே நிரப்பி

சலனமில்லாமல்

பயணிப்பதால் தான்

சண்டைகளை பற்றி

அதிகமாக கவலைக் கொள்ளாமல்

உற்சாகமாக இளமையோடு

வெகுதூரம் பயணிக்க

முடிகிறது போலும்

இந்த ரகசியத்தை

உணர்ந்தேன்!

நானும் பேரமைதியில்

புதைத்துக் கொண்டேன்!

இங்கே சண்டைகளை பற்றி

பேசுவதை போல

பேரமைதியை எவரும்

கண்டுக் கொள்ளாமல்

இருப்பது 

எனக்கு வசதியாக போயிற்று!

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...