பக்கங்கள்

திங்கள், 17 ஜனவரி, 2022

பேரமைதி

 எந்தவித சலனத்தையும்

சுமக்காமல் 

அந்த சாலையில் பயணிக்கிறேன்!

இந்த பிரபஞ்சம்

தன்னுள் அமைதியை

மட்டுமே நிரப்பி

சலனமில்லாமல்

பயணிப்பதால் தான்

சண்டைகளை பற்றி

அதிகமாக கவலைக் கொள்ளாமல்

உற்சாகமாக இளமையோடு

வெகுதூரம் பயணிக்க

முடிகிறது போலும்

இந்த ரகசியத்தை

உணர்ந்தேன்!

நானும் பேரமைதியில்

புதைத்துக் கொண்டேன்!

இங்கே சண்டைகளை பற்றி

பேசுவதை போல

பேரமைதியை எவரும்

கண்டுக் கொள்ளாமல்

இருப்பது 

எனக்கு வசதியாக போயிற்று!

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக