ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 23 ஏப்ரல், 2022

போதை என்பது..

 அங்கே 

வாழ்வெனும் மதுவை கணக்கற்ற நிலையில் 

பருகி போதை ஏறாமல்

தவிக்கிறான் ஒருவன்...

இங்கே 

இறப்பெனும் 

ஒரு துளி அமிர்தத்தை 

பருகி...

போதையேறி ஆனந்த தாண்டவம் புரிகிறான்...

இன்னொருவன்...

இங்கே இதெப்படி சாத்தியம்

என்று கேள்வி கேட்டு

சலசலப்புடன் நகரும்

மக்களுக்கு தெரியாது

போதை என்பது

விகாரமற்ற மனதின்

வெளிப்பாடு என்பது...

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...