பக்கங்கள்

செவ்வாய், 15 நவம்பர், 2022

எது தான் வாழ்வின் தாத்பரியம்?

 

இருவரின் உணர்வு பெருக்கிலோ..

தீராத காதலிலோ..

இங்கே ஜனனம்

நடந்து விட்டது..

நான் இங்கே

புரியாமல் திகைத்து

நிற்கிறேன்..

அங்கே ஒருவரை கூப்பிட்டு

உங்களுக்கு வாழ்வின் தாத்பரியம் புரிகிறதா என்கிறேன்..

அவரோ எனக்கு தற்போது

மிகுந்த பசி

நான் சாப்பிட செல்லவா

என்று

மிகவும் பரிதாபமாக 

கேட்கிறார் ...

இங்கே எது தான் வாழ்க்கை

என்று தேடி அலைந்து

சோர்ந்து போகும் போது

என்னோடு வந்து விடு

உனக்கான தேடல்

இந்த ஜென்மத்தில்

நிறேவேறப் போவதில்லை என்று மிகவும் பாசமாக

அரவணைத்து கூட்டி

செல்கிறான்...

எமன் எனும் கால தலைவன்

நானும் பலி ஆடாக

அவனோடு செல்கிறேன்..

இவ்வளவு தான்

வாழ்வின் சுவையா என்று

யோசித்தபடியே..

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக