பக்கங்கள்

செவ்வாய், 15 நவம்பர், 2022

காலத்தின் கைகளில் நான் ஒரு குழந்தையாக

 

மாயம் நிறைந்த வாழ்வின்

சுவடுகளை

அவ்வளவு எளிதாக

புரிந்துக் கொண்டு

கடந்து விட தெரிவதில்லை

எனக்கு...

காலத்தின் கைகளில்

புரியாமல் அழுது புலம்பும்

குழந்தையாக

நொடி தோறும் ஆறுதல்

தேடும் குழந்தை மனமாக

சத்தம் இல்லாமல்

நகர்கிறது வாழ்க்கை...

மாயத்தின் திரையை

இங்கே எவர் விலக்கக் கூடும் என்ற புதிருக்கு மட்டும்

இன்னும் விடை கிடைக்காத

சுவாரஸ்யமான

கால பயணியாக நான்...

#இளையவேணிகிருஷ்ணா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக