பக்கங்கள்

புதன், 16 நவம்பர், 2022

சுமைகளற்ற பயணம்

 

அந்த காரிருள் நேரத்தில்

மின்சார விளக்குகள் என் மீது

பாச மழை பொழிய இரவை ரசித்து

பயணிக்கிறேன்..

எந்தவித சத்தமும் இல்லை

 அந்த நெடுஞ்சாலையில்

ஆச்சரியம் தான் எனக்கு..

திடீரென என்னை பின்தொடர்ந்து நடப்பவர்

நீங்கள் யார் என்று கேட்கிறார்..

நான் ஒரு கால பயணி என்றேன் சிரித்தபடியே

அப்பொழுது நான் சாலை பயணியா என்றார்

பதிலுக்கு பலமாக சிரித்தவாறே..

அப்படி இல்லை

நீங்கள் ஆசைகளை சுமந்து பயணிக்கும்

கால பயணி..

நான் எந்தவித சுமைகளுமற்ற கால பயணி என்றேன்...

நானும் கூட அந்த நிலையை அடைய

பிரயத்தனம் செய்து கொண்டு இருக்கிறேன்

என்றார்.. முயற்சி செய்யுங்கள்..

இங்கே எல்லாமே சாத்தியம் தான்..

வெறுமை ஒன்றே நிலையானது என்றேன்..

உண்மை தான் என்றார் புன்னகைத்து..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக