பக்கங்கள்

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

அந்த நாளில் ..

 

எந்தவித எண்ணங்களும்

என்னை தொந்தரவு செய்ய

துணியாத நேரத்தில்

நீ தைரியமாக

உன் நினைவுகளை

என் நெஞ்சத்தில்

உலாவ விட்டு விட்டு

எங்கோ சென்று விட்டாய்..

நானோ அதன் துன்புறுத்தலில்

பைத்தியமானேன்...

கண்டுக் கொள்ள எவரும்

இல்லாத அநாதையாக

தவித்துக் கிடக்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக