பக்கங்கள்

புதன், 7 செப்டம்பர், 2022

கழுதையை ஏசாதீர்கள்

 


கழுதையை ஏசாதீர்கள்..

அத்தனை ஜீவராசிகளும்

படை திரண்டு

ஒரு நாள்

அதன் பின்னால்

போகும் போது

நீங்கள் மட்டும்

தனித்து விடப்படுவீர்கள்..

இங்கே கழுதைகள்

ஆத்ம தத்துவத்தை

உணரக் கூடாது என்று

விதி ஏதும் வகுக்கப்படவில்லை..

அரசனின் பின்னால்

போகிறவர்கள்

ஒரு நாள் கழுதையின்

பின்னால் போவதை

வேடிக்கை மட்டுமே

பார்க்க முடியும்..

அல்லது

மனசஞ்சலத்தோடு

வீதி தோறும்

திரியக் கூடும்...

இதை

மனதில் நிறுத்துங்கள்...

#தத்தவகவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக