பக்கங்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

சாபத்தின் நன்மை..


 உறங்கும் முன் ஒரு சிந்தனை:-

ஒருவர் உங்களோடு நெடுநேரம் சண்டை போட்டு விட்டு உங்களை நீ நாசமாக போய் விடுவாய் என்று சபிக்கிறார் என்றால் ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.. ஏனெனில் அவரையும் அறியாமலேயே உங்களுக்கு சாபம் கொடுத்து நன்மை செய்து இருக்கிறார்.. என்ன இது புது கதையாக உள்ளது என்று கேட்கிறீர்களா.. இல்லை இதில் ஒரு ஆழ்ந்த தத்துவம் அடங்கி உள்ளது.. அதாவது அவர் இங்கே நீ என்று குறிப்பிட்டு தானே நாசமாக போ என்று சொல்கிறார்.. அப்போது அங்கே நீ என்பது எது.. #நான்.. #நான் அழிந்தால் தானே பிறவி சூழலில் இருந்து முக்தி அடைய முடியும்...முக்தி அடைந்தால் தானே நாம் இந்த பிறவி எனும் பெரும் நோயிலிருந்து விடுபட முடியும்.. இப்போது புரிகிறதா அவர் உங்களுக்கு நன்மை தானே செய்து இருக்கிறார்...

எதிலும் ஒரு நன்மையை தேடுங்கள்.. வாழ்வில் ஒரு அமைதி கிடைக்கும்..

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக