பக்கங்கள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

பொய் முகம் காட்டாத மேகம்


எதுவுமே வேண்டாம் என்று

இருக்கும் பொழுது..

எதுவோ நடந்து விட்டு

போகட்டும் என்று

இருக்கும் பொழுது..

வாழ்வியல் பயணத்தின்

சுவடுகளை மனதில் தேங்காமல்

பயணிக்கும் பொழுது..

எந்தவித ஆவலும்

இல்லாமல் இருக்கும் பொழுது

இதோ இந்த மழைக் கால மேகம் ☁️

ஒன்று என் கைபிடித்து

ஏமாற்றாமல்

கொஞ்சம் கூட பொய் முகம் காட்டி

பாவனை செய்யாமல்

என் வாழ்வின் இந்த நொடிக்கு

அர்த்தம் கற்பித்து

என்னை அமைதியடைய செய்கிறது..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக