பக்கங்கள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

என் ஜனனம்


கருவிலேயே எமனை

எதிர்த்து இந்த பூமிக்கு

வந்தவள்..

தினம் தினம் எமனிடம்

போராடுகிறேன்..

எமனே ஒவ்வொரு முறையும்

தோற்று தலைகுனிகிறான்..

அந்த ஈஸ்வரனே எமனிடம்

சொல்வான்..

அந்த பக்தையிடம் மட்டும்

கவனம் என்று..

நான் பிறந்தது 

ஓர் சராசரி நிகழ்வல்ல..

எண்ணற்ற பலருக்கு

ஓர் அபூர்வ ஜனனம்

என்பதை தானாகவே

விளங்கி விடுகிறது

அல்லது விளக்கப்படுகிறது...

நான் அந்த வாமனனின் அம்சம்..

என்னிடம் கொஞ்சம்

கவனமாக இருங்கள்..

ஆதரிக்கவும் கூடும்..

பாதாளத்தில் புதைத்து

அழுத்தவும் கூடும்..😊

அது அவரவர் செய்கை பொறுத்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக