பக்கங்கள்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

சுதந்திரம் என்பது யாதெனில்...

 


சுதந்திர தின சிறப்பு தலையங்கம்:-

தமிழ் நாட்டில் கனிம வளங்கள் கொள்ளை போவதை இதோடு நிறுத்த சட்ட சபையில் மசோதா நிறைவேற்றி இதை மக்கள் இயக்கமாக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும்... இது தான் சுதந்திர தின வாழ்த்து செய்தி...


அனைத்து ஜீவ ராசிகளும் வாழ தான் இந்த பிரபஞ்சம் சிருஷ்டிக்கபட்டு இருக்கிறது...


இங்கே நமது பாரதத்தில் இயற்கைக்கு எதிராக எத்தனையோ விஷயங்கள் நடந்துக் கொண்டு இருக்கிறது...அதை இதோடு நிறுத்திக் கொள்ள தீவிரமாக நாட்டை ஆள்பவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்...


அதை விடுத்து வெறும் பொருளாதாரம் மற்றும் வல்லரசு என்று சுதந்திர உரையில் மாய வித்தைகள் காட்சியாக மக்கள் மனதில் ஓட வைக்கும் பேச்சை நிறுத்துங்கள்...


இங்கே மக்களின் வாழ்வுரிமை மற்றும் பல ஜீவ ராசிகளின் வாழ்வுரிமையை காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்...


அதை விடுத்து வெறும் பாரத் மாதாவிற்கு ஜெ என்று முழங்குவதால் நிச்சயமாக ஒன்றும் நடக்காது...


ஆட்சியாளர்கள் இயற்கை சுரண்டலை விடுத்து மக்கள் மற்றும் அனைத்து ஜீவ ராசிகளும் நிம்மதியாக வாழ இந்த சுதந்திர உரையில் சூளுரைக்க வேண்டும்...


வெறும் பொருளாதார பார்வையில் நாட்டை இது வரை வெறும் குட்டிச் சுவராக்கியது போதும்...


நதிகளை மலைகளை காடுகளை மீட்கும் உறுதி மொழியே தற்போதைய தேவை...

எங்கே பார்த்தாலும் கான்கிரீட் காடுகள் பெருகி மிக பெரிய அச்சுறுத்தல் உள்ளது... நிஜமாகவே கட்டிடங்களை பார்க்கும் போது அடர்ந்த பயம் ஒன்று மனதிற்குள் புகுகிறது...


ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு... அது கிராமமோ நகரமோ.. இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்...


இருக்கும் தொழிற்சாலை தவிர புதிதாக வரக் கூடாது... கான்கிரீட் காடுகளுக்கு எதிரான போராட்டமே தற்போதைய தேவை...

நில உச்சவரம்பு சட்டம் போல வீடு உச்ச வரம்பு சட்டம் கொண்டு வர வேண்டும்...


இல்லை என்றால் காடுகள் காணாமல் போய் நரகத்தின் வாசலுக்கு நம்மை அழைத்துச் சென்று இருக்கும் இந்த நிலையை மாற்ற முடியாது...

இது தான் சுதந்திர தின செய்தி...

வாழ்த்துக்கள் மக்களே 🤝🙏🍂🦋😼🙊🥀🍃🪴🌴🪵🌲🌳🪾🌿☔❄️🌊🏖️🫎🐰🐭🐶🐺🐻🐗🐴🦎🐉🦖🦕🐊🐍🦕

#சுதந்திரதினசிறப்புதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/08/26.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக