பக்கங்கள்

வெள்ளி, 30 ஜனவரி, 2026

இன்றைய தலையங்கம்:-மீளுமா காங்கிரஸ்?

 


இன்றைய தலையங்கம்:-

#மீளுமா காங்கிரஸ்?:-

ஒன்றை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்... அது என்ன என்றால் எப்போதும் அடுத்தவர் முதுகில் சவாரி செய்து பழக்கப்பட்டு விட்டது அல்லது அதற்கு அடிமையாக்கப்பட்டது காங்கிரஸ்... மாநிலத்தில் களத்தில் இறங்கி வேலை செய்ய யாரேனும் ஒருவர் தமிழ் நாட்டில் காட்டுங்கள் காங்கிரஸ் கட்சியில் என்று கேட்டால் நிச்சயமாக எவரிடமும் பதில் இருக்காது..

இதை பொதுமக்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் ஏன் காங்கிரஸ் உட்பட...

எப்போது பார்த்தாலும் திமுக காங்கிரஸ் கட்சியையும் தூக்கி சுமந்து காங்கிரஸ் தொகுதியிலும் வேலை பார்த்து வெற்றியை தேடி தந்து விடுவது வாடிக்கையாகி போனதால் அவர்கள் உழைக்காமலேயே எப்படி அதிக தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் பெறுவது என்று யோசிக்கிறார்கள்..

உண்மையில் தமிழ் நாட்டில் போல காங்கிரஸ் வேறு எந்த மாநிலத்திலும் மோசமாக இல்லை...

இதில் வேறு தவெக கூட கூட்டணி வேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பது மிகவும் மிகவும் கேலிக் கூத்தான விசயம்...


ஒரு அரசியல் கட்சி காமராஜருக்கு பிறகு தலை தூக்கவில்லை என்றால் அது யார் தவறு?


இந்த விசயத்தில் திமுக இவர்களுக்காக நிறைய தியாகம் செய்து உள்ளது... குறிப்பாக திமுக தொண்டர்கள்... அவர்கள் ஓட்டு கேட்க கூட வர சொன்னால் கூட காங்கிரஸ் வேட்பாளர் மெத்தனமாக இருந்த காட்சிகள் எல்லாம் உண்மையாக உழைத்து வந்த திமுக தொண்டர்களுக்கு மற்றும் மக்களுக்கு தெரியும்...

எப்போது பார்த்தாலும் பதவி சண்டை கீழ் மட்டத்தில் இறங்கி வேலை செய்யாத பண்ணையார் மனபாங்கு இதெல்லாம் இப்போது வேலைக்கு ஆகுமா என்று யோசிக்க மாட்டார்களா?

எனக்கு தெரிந்து திமுக தான் காங்கிரஸ் கட்சியை சோம்பேறி கட்சியாக மாற்றியதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்...


காங்கிரஸ் தேர்தலுக்கு தேர்தல் ஏதாவது நாடகம் நடத்துவதை நிறுத்தி கட்சியை அடிமட்டத்தில் இருந்து எப்படி மாற்றியமைத்து மக்களோடு மக்களாக இருந்து வேலை செய்ய வைக்க வேண்டும் என்று டெல்லி தலைமை யோசிக்க வேண்டும்...


அதை விடுத்து எப்போது பார்த்தாலும் தேர்தல் வந்து விட்டால் சீட்டு பேரம் பேசுவதை மட்டும் தீவிரமாக வைத்துக் கொண்டு இருந்தால் ஏதோ கொஞ்சம் நஞ்சம் இருக்கும் காங்கிரஸ் அபிமானிகள் வேறு கட்சிக்கு சென்று விடுவார்கள்...


தமிழ் நாட்டில் தொடர்ந்து காங்கிரஸ் பல தொகுதிகளில் வெற்றி அடைந்து வருவது எல்லாம் திமுக கட்சியில் உள்ள தொண்டர்களால் தான்...


உண்மையில் தியாகி பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் திமுக தொண்டர்களுக்கு தான் தமிழ் நாட்டில் கொடுக்க வேண்டும்...


காங்கிரஸ் தமிழ் நாட்டில் கை நழுவி செல்லும் முன் யோசிக்குமா டெல்லி தலைமை என்று உண்மையான காங்கிரஸ் அபிமானிகள் கவலையில் உள்ளார்கள்...

காங்கிரஸ் சுய பரிசோதனை இப்போது செய்யாவிட்டால் இனி எப்போதும் இல்லை...

ஏனெனில் தமிழ் நாட்டில் பிஜேபி மிகவும் மும்முரமாக வேலை செய்கிறது... ஆனால் அதற்கு நேர் எதிராக வழக்கம் போல உங்களுக்குள்ளேயே சண்டை இடுகிறீர்கள்...

களத்தில் உழைப்பு மிகவும் அவசியம்.. தொகுதி மக்கள் அதை விட முக்கியம்...

#காங்கிரஸ்vsதிமுக.

#இளையவேணிகிருஷ்ணா.

#இன்றையதலையங்கம்.

நாள்:31/01/26.

சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக