எத்தனையோ வடிவங்களில்
நீ எனக்கு தரிசனம் கொடுத்தாய்
ஏன் ஒவ்வொரு கணங்களும்
ஒவ்வொரு நிறங்களை
ஏந்தி நிற்கிறது...
என் காட்சி பிழையோ என்று
நினைத்து மயங்கிய போது
நீ ஒரு நாள் மிரள வைக்கும்
செந்தீ நிறத்தில்
எனக்கு காட்சிக் கொடுத்து
நான் பயந்து நடுங்கி
விலகும் முன்பே
என்னை ஆட்கொண்டு
உன்னுள் கரைத்தாய்...
அங்கே நான் இது நாள் வரை
கண்ட நிறங்கள்
அத்தனையும் கண்டு
அதிசயித்து நிற்கிறேன்...
நீ ஒரேயொரு புன்னகையுடன்
என் தலை கோதி
உன் பேரன்பில் என்னை
மீண்டும் கரைத்தாய்...
இது தான் பக்தி எனும்
பேரின்ப நிலையோ
நான் அறியேன்
நடராஜா...
எனக்கு தெரிந்ததெல்லாம்
உன் வசீகரிக்கும் நடனத்தில்
என்னை தொலைப்பதே...
இது தவிர நான் வேறொன்றும்
அறியேன் தியாகேசா....
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:26/01/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக