#இன்றையதலையங்கம்:-
#தேர்தல் #சீர்திருத்தம் #தேவை #இக்கணம்:-
எனக்கு தெரிந்த வரையில் இந்த மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் அதே சமயம் கோடி கணக்கில் சீட்டுக்காக கட்சி தலைமைக்கு பணத்தை கொடுக்காமல் வருபவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு என்று சொன்னால் நிச்சயமாக ஊழல் குறையும்... மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை நிறைவேற்றாமல் விட்டவர்களை எந்த பயமும் இல்லாமல் கேள்வி கேட்கலாம்... மேலும் தேர்தல் கமிஷனே இந்த ஓட்டுக்கு சீட்டு என்ற புரையை சீர்திருத்த கத்தியால் வெட்டி எறிய வேண்டும்..
இதோடு போகட்டும் ஓட்டுக்கு சீட்டு என்ற நடைமுறை...
மக்களும் தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் யோசிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்...
ஆனால் இதை டிஎன்.சேஷன் போன்ற மிகவும் நேர்மையான அதிகாரி இருந்தால் சாத்தியம் தான் என்று தோன்றுகிறது...
துட்டுக்கு ஓட்டு என்பது எங்கே இருந்து துவங்குகிறது என்று நினைக்கிறீர்கள்... இந்த துட்டுக்கு சீட்டு என்ற நடைமுறையில் தான்...
தயவுசெய்து செய்து கோடிக் கணக்கில் செலவு செய்து எம் எல் ஏ சீட் வாங்காதீர்கள் வேட்பாளர்களே!
அது மறைமுகமாக நீங்கள் மக்கள் நலனை திருடும் ஒரு வகையான மோசமான செயல் என்று உணருங்கள்...
மக்களுக்கு சேவை செய்ய எதற்காக துட்டு செலவு செய்து நீங்கள் தேர்தலில் நிற்க வேண்டும்?
நீங்கள் துட்டு செலவு செய்து நின்றால் பாதிக்கப்பட போவது மக்களாகிய நாங்கள் தானே...
யோசியுங்கள்...
மக்கள் நிச்சயமாக உங்கள் பக்கம் இருப்பார்கள்...
இது தான் மகேஷன் சேவை என்று ஒரு நொடி யோசித்தீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக கட்சி தலைமையிடம் தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனை பலப்படும்...
இங்கே அரசியல் ஆர்வம் மக்கள் நலன் என்று மிகவும் தீவிரமாக அலைபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்...
அவர்களை தேடி கட்சி தலைமை சீட் கொடுக்க வேண்டும்...
எந்த பெரிய கட்சியிடம் காசு இல்லை தற்போது?
அவர்கள் பினாமி பெயரில் உள்ள சொத்துக்களை விற்றாலே எத்தனை வேட்பாளருக்கு செலவு செய்யலாம்...
இது பற்றி யோசியுங்கள்...
இந்த கட்டுரை வாசித்த பிறகு இதை தேர்தல் கமிஷனுக்கு எவரேனும் எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன்...😉🤭🙌🎉🥲.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/01/26.
#தேர்தல்சீர்திருத்தநடவடிக்கை.
#இன்றைய #தலையங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக