#இன்றையதலையங்கம்:-
#கோயில் #அரசியல்:-
உங்கள் அரசியலுக்கு தயைக் கூர்ந்து கோயிலை பயன்படுத்தாதீர்கள் 🙏
ஏனெனில் இங்கே ஆத்மார்த்தமான உணர்வோடு தான் அந்த காலத்தில் கோயில் கட்டப்பட்டு இருக்கிறது...
எதை எடுத்தாலும் அரசியலாக்குவது அறநிலையத்துறைக்கு நல்லது அல்ல...
இந்நேரத்தில் கலைஞர் இருந்து இருந்தால் நிச்சயமாக இப்படியான நிகழ்வுகள் நடக்க விட்டு இருக்க மாட்டார்... ஏன் ஜெயலலிதா இருந்திருந்தாலும் இப்படி நடந்து இருக்காது...
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அரசு இருப்பது தான் கோயில் விசயத்தில் காட்டுகிறது என்று தோன்றுகிறது...
மரபு என்பது கோயில் மசூதி தேவசபை இப்படி ஒவ்வொரு வழிபாட்டு தலங்களுக்கும் இருப்பதை அனைவரும் மதிக்க வேண்டும்...
மேலும் பழைய காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அந்த கோயில் தொடர்பான தகவல்களை வாசித்து விட்டு பிறகு வாருங்கள் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்...
அரசியல் செய்ய இங்கே ஆயிரம் ஆயிரம் விசயங்கள் உள்ளது...
பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் சமூக சீர்கேடுகள் அவ்வளவு நடக்கிறது..அதை அரசியல் ஆக்குங்கள்...
எத்தனையோ பேருந்துகள் காய்லாங்கடைக்கு போகும் நிலையில் உள்ளது..அதை மாற்ற வேண்டும் என்று போராடுங்கள்...
சாலை விரிவாக்கம் என்கின்ற போர்வையில் சாலையோரம் உள்ள அற்புதமான பயண உணர்வை தரும் புளிய மரத்தை வெட்டாமல் அதை வேறு இடத்திற்கு மாற்றி நட முடியுமா என்று தானே முன்வந்து நீதிபதிகள் வழக்கு போடுங்கள்...
இங்கே இயற்கை சுரண்டல்கள் அவ்வளவு நடக்கிறது..அதை தடுக்க ஏதாவது அரசியல் கட்சிகள் தினம் தினம் சாலையில் அமர்ந்து போராடுங்கள்...
இதற்கு மேல் ஒரு விஷயம்.. இங்கே எந்த அரசாங்க பணிகளாக இருந்தாலும் அது நீதிமன்றம் உட்பட மக்கள் வரிப்பணத்தில் தான் வாழ்க்கை உங்களுக்கு... அந்த மக்களுக்கு துரோகம் செய்யலாமா என்று ஒரு நிமிடம் ஒரேயொரு நிமிடம் யோசித்தால் இங்கே டாஸ்மாக் கடையில் இருந்து ஒரே உத்தரவில் எல்லா சமூக சீர்கேடுகளையும் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும் என்ற நிலை இருக்க எல்லாவற்றையும் பணத்தை வைத்து நடத்தினால் அந்த கர்மா சும்மா விடுமா?
கொஞ்சம் யோசியுங்கள் 🍂
இங்கே மாற்ற முடியாத விசயங்கள் என்று எதுவும் இல்லை...
அதிகாரிகள் தனது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் அரசாங்கம் திருத்தும்...
அது அரசு ஊழியர்கள் எல்லோருமாக சேர்ந்து இருந்தால் இங்கே எதுவும் சாத்தியமே...
ஆனால் ஊதிய உயர்வுக்காக போராடும் ஒற்றுமை சமூக அக்கறையில் இல்லையே...😏.
இங்கே தன்னில் இருந்து மாற்றம் தொடங்க வேண்டும்...
மக்களும் கொஞ்சம் துட்டுக்கு ஓட்டு போடாமல் ஒற்றுமையாக இருந்தால் இந்த சமூகம் உருப்படும்... இல்லை என்றால் தமிழ் நாட்டை எந்த பிரம்மா விஷ்ணுவாலும் சிவனாலும் காப்பற்ற முடியாது...
விட்டு போன கடவுளை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்...
#கோயில்அரசியல்
#தலையங்கம்.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:04/12/25
வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக