இன்றைய தலையங்கம்:-
தூய்மை பணியாளர்களின் துயரம்:-
கலைஞர் இருந்து இருந்தால் இந்த மாதிரி மோசமான அடாவடித்தனம் நடந்து இருக்காது... முதலில் முதலமைச்சர் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொல்வதற்கு கூட ஒரு மனிதர் வேண்டும் என்கின்ற நிலையில் இருக்கிறார் என்றால் அங்கே யோசனை சொல்பவர்களை அல்லது முதலமைச்சரை தவறாக நடத்துபவர்களை அந்த பதவியிலிருந்து விலக்க வேண்டும்...
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...
இந்த மாதிரி நடந்து கொள்வது ஒரு அரசாங்கத்தின் நன்மதிப்பை கெடுக்கும் என்ற குறைந்தபட்ச ஞானம் கூட இல்லாமல் ஒரு அரசாங்கம் செயல்படுகிறது என்று எடுத்துக் கொள்வதா அல்லது அடித்தட்டு தொழிலாளர்களை இப்படி தான் நடத்துவோம் என்று எடுத்துக் கொள்வதா மக்கள் என்ற கேள்வி எழுகிறது அல்லவா... அனைவருக்குமான அரசு என்று அடிக்கடி சொல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின் இது தான்அனைவருக்குமான அரசா என்று சாதாரண குடிமக்கள் கூட கேள்வி கேட்பார்களே அப்போது என்ன இந்த அரசாங்கம் பதில் சொல்லும்? சமத்துவம் சமநீதி எல்லாம் மேடை நாடகமா என்று எண்ணத் தோன்றுகிறது நடக்கும் நிகழ்வுகள் அப்படி தான் உள்ளது... விழிப்புணர்வு அவசியம்...
#தூய்மைபணியாளர்களின்
#துயரம்
#இன்றையதலையங்கம்.
இளையவேணி கிருஷ்ணா.
நாள் 14/08/25/வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக