பக்கங்கள்

சனி, 14 செப்டம்பர், 2024

அகங்கார வீதியில் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டு இருக்கிறேன்...


அத்தனை சுகங்களுக்கும் 

விடை கொடுத்து விட்டு 

எந்தவித சுகங்களும் இல்லாமல் 

பயணிக்கும் போது 

ஒரு சிறு துளி சுகம் என்னை 

ஏமாற்றி என்னுள்ளே 

எங்கே புதைந்து கொண்டது என்று 

தேடி தேடி களைத்து விடும் போது 

நான் காலத்திடம் 

சரணாகதி அடைந்து

கண்ணீர் மல்கி 

கூத்தாடுகிறேன் 

அந்த ஒரு துளி சுகத்தின் அவஸ்தை 

என்னை நெருப்பாக 

தகிக்கிறது என்று ...

காலமோ நீ ஏன் அதையே நினைத்து 

அதற்கு உயிர் கொடுத்து உனக்கு 

மிக பெரிய 

எதிரியாக்கிக் கொள்கிறாய் என்று 

மிகவும் இலகுவாக கேட்டதில் தான் 

புரிந்தது நான் அகங்கார வீதியில் 

அங்கும் இங்கும் 

அலைந்துக் கொண்டு 

இருக்கிறேன் என்று...

#அகங்கார வீதியில்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/09/24/ஞாயிற்றுக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக