பக்கங்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

ஆசையின் சலனத்தை யார் அறியக் கூடும்?




அந்த யாருமற்ற தனிமையில் தான் 

என் தேடலுக்கான விடை 

எனக்குள் கை மாறுகிறது...

உள்ளுக்குள் ஆழ்ந்த அமைதியில் 

எந்தவித சங்கடமும் இல்லாமல் 

நான் அதை நான் பெற்றுக் கொள்ள 

முற்படும் போது 

என்னையும் அறியாமல் 

லௌகீக விசயத்தின் 

சிறு தீண்டலில் நான் கொஞ்சம் 

நிலை தடுமாறி வீழும் போது 

என் கை நழுவி போன அந்த விடை 

எனை கொஞ்சம் பதட்டமாகவும் 

பரிதாபமாகவும் 

பார்த்து விடுவதில் தான் 

நான் கூனி குறுகி போய் விடுகிறேன் 

என் ஆசையின் சலனத்தை 

யார் அறியக் கூடும்???

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/09/24/சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக