பக்கங்கள்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

ஒரு காட்டாற்றின் கருணை...

 


அந்த பெரும் ராஜ்ஜியத்தின் 

அரசனின் அகங்காரத்தை 

இழுத்துச் செல்கிறது 

ஒரு காட்டாற்று வெள்ளம்...

என்றோ வெறுமனே 

வெறும் நிலத்தில் புதையாமல் 

கிடந்த அந்த சிறிய விதையின் 

அளவற்ற உயிர் தோன்றலின் 

நம்பிக்கையை மட்டும் 

மறந்து விடாமல் கை பிடித்து 

அழைத்து புதைத்து சென்று 

விடுகிறது 

அதே காட்டாற்று வெள்ளம்...

ஒரே நிகழ்வின் இருவேறு விதமான 

விசித்திர 

இந்த நிகழ்வை 

கொஞ்சமும் சலனப்படாமல் 

பெரும் அமைதிக் கொண்டு 

வேடிக்கை பார்க்கிறது 

நம்மை சூழ்ந்த அந்த பரந்து விரிந்த வானம்...

#ஒருகாட்டாற்றின்பயணம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 05/08/24/திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக