பக்கங்கள்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

இயற்கையும் நாமும்...


இந்த இயற்கை 

ஏதோவொரு வகையில் 

சமநிலைப் படுத்திக் கொண்டு 

நிச்சலனமாக

பேரமைதியான நதியாக 

பயணிக்கிறது...

நாம் தான் சமநிலை இல்லாத 

அல்லது சமநிலைக்கு 

பழக்கப்படுத்த தெரியாத மனதை 

வைத்துக் கொண்டு 

பெரும் சலனத்தோடு பயணிக்கிறோம் 

ஒரு காட்டாறு போல...

#காலைகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் #ஆடி18.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக