பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2024

சலனமற்று திரும்பி பார்ப்பேன்...🤷


இங்கே என்றேனும் ஒரு நாள் 

என் ராஜ்யம் வீழ்ந்து விடக் கூடும்..

சலனமற்ற பார்வையால் 

நான் அதை கடந்து 

சென்றுக் கொண்டே இருப்பேன்..

இங்கே உன் ராஜ்ஜியம் தானே 

வீழ்ந்து கிடக்கிறது 

நீ ஏன் இப்படி சலனமற்று 

கடந்து செல்கிறாய் என்று 

அங்கே எவரேனும் 

கூக்குரல் இட்டு கேட்கவும் கூடும் 

அப்போதும் 

நான் சலனமற்று திரும்பி 

பார்ப்பேன் ...

வீழ்ந்தது நானல்லவே என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

20/07/24.

சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக