பக்கங்கள்

சனி, 15 ஜூன், 2024

காலமும் நானும்...

 


காலம் என் ஆனந்தமான 

முகத்தை பார்த்து கேட்டது...

என்ன அவ்வளவு மகிழ்ச்சியான 

விஷயம் நடந்து விட்டது 

உன் வாழ்வில் 

இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாய் 

என்று கேட்டது.. 

இந்த துயரம் நிறைந்த பாதையில் 

கிடைத்த சுவாரஸ்யங்கள் விட 

என் வாழ்வில் அனுபவித்து வந்த 

மகிழ்ச்சி நிறைந்த பாதையில் 

சென்ற போது 

நிச்சயமாக சுவையற்ற 

ஒரு கனியை போல 

சுகமற்ற பயணமாகவே இருந்தது 

காலமே ...என்றேன் காலத்திடம்...

காலமோ எப்போதும் உன் 

பார்வையும் பாதையும் 

தனித்துவமானது என்று 

சொல்வதை தவிர 

வேறு என்ன சொல்ல என்று 

சொல்லி விட்டு 

ஒரு சுவையான தேநீர் கொண்டு வா 

உன் கைகளால் என்றது...

நானும் மகிழ்வோடு 

தேநீர் கோப்பையோடு வந்து 

அதனிடம் ஒன்று கொடுத்து விட்டு 

நானும் அதன் சுவையை 

மிச்சம் இல்லாமல் 

பருகினேன் அங்கே சிறகை விரித்து 

வானத்தை அளந்து திரிந்த 

பறவையை பார்த்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/06/24/சனிக்கிழமை.

முன்னிரவு பொழுது 10:10.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக