பக்கங்கள்

சனி, 15 ஜூன், 2024

காலத்தின் பேரன்பு


அந்த துயருற்ற சாலையில் 

நான் என்னை மறந்து பயணிப்பதை 

பார்த்த காலம் மனம் கலங்கி 

இருக்க வேண்டும்...

என் கடுமையான அந்த சூழலை 

மாற்றும் படி கிரகங்களிடம்

நான் செய்த தர்ம செயல்களை முன் வைத்து 

கண்ணீரோடு மன்றாடியது...

அதை பார்த்த கிரகங்கள் 

என் அந்த கடினமான 

சூழலை மாற்றியமைக்க 

முன் வந்ததை 

நான் குறிப்பால் உணர்ந்தேன்...

வேகமாக கிரகங்களின் 

காலில் விழுந்து 

என் இந்த சூழலை மாற்ற வேண்டாம் 

நான் இந்த பெரும் துயரத்தை 

பேரானந்தமாக அமைதியாக 

விருப்பத்தோடு தான் 

அனுபவிக்கிறேன்...

காலம் என் மீது கொண்ட 

சிநேகத்தால் 

உங்களை நாடி இருக்கக் கூடும் 

என்றேன் ...

இதை கேட்டு கிரகங்கள் என்னை 

விசித்திரமாக 

பார்த்து விட்டு காலத்தோடு 

நான் கொண்ட 

சிநேகத்தை பார்த்து 

பொறாமை கொண்டு 

என்னை கடந்து சென்றது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/06/24/சனிக்கிழமை.

முன்னிரவு பொழுது 09:40.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக