பக்கங்கள்

புதன், 15 மே, 2024

இன்றைய தலையங்கம்

 

இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை நோகடிக்க வேண்டும் என்று எனக்குள் கேள்வி எழுகிறது...பாடகி சைந்தவி ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து தற்போது இணையதளத்தில் பெரும் விவாதமாக போய்க் கொண்டு இருக்கிறது... அவர்கள் பள்ளி காலத்தில் இருந்து காதலித்து திருமணம் செய்தவர்கள்.. பதினோரு ஆண்டு காதல் வாழ்க்கையில் ஒரு அன்பு பரிசாக குழந்தையும் உள்ளது... பெரும் காதல் கொண்ட தம்பதிகள் ஏதோ அவர்களுக்குள் ஒத்து போகவில்லை தீர்க்கமாக ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள்... இது முழுக்க முழுக்க அவர்கள் சொந்த பிரச்சினை... மேலும் அதீத காதல் கொண்டு நேசித்தவர் கள் பிரியக் கூடாது என்று இயற்கை விதிகள் ஏதும் இல்லையே... சொல்ல போனால் பெரும் காதல் கொண்ட தம்பதிகள் தான் மனதில் ஏதோ பாரத்தோடு பிரியவும் கூடும்... அது அவர்களின் பெரும் நேசம் கொண்ட இரு மனதிற்கு தெரிந்தால் போதும்... நீங்கள் ஏன் உங்கள் சொந்த கருத்துக்களை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்... ஒரு பிரபலமாக இருப்பது அவ்வளவு பெரிய கொடுமையான விசயமா என்று எண்ண தோன்றுகிறது... அவர்களின் காயத்திற்கு மருந்து கூட நீங்கள் போட வேண்டாம்... அந்த தம்பதிகளை நிம்மதியாக மன போராட்டம் இல்லாமல் வாழ விடுங்கள்..ஏதோ அவர்களின் நெருக்கத்திற்கு ஒரு ஆசுவாசமான இடைவெளி தேவைப்படுகிறது... அது அவர்கள் இருவருக்கும் தேவையாக இருக்கிறது... இதில் உங்களை கேட்டு தான் முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பது போல பதிவு போடாதீர்கள்...

உண்மையில் சைந்தவி யின் தேவாமிர்த குரலில் கண்களை மூடி மிதந்து செல்லுங்கள்... மற்ற படி அவர்கள் சொந்த வாழ்க்கையை பற்றி அவர்களும் அவர்களின் விதியும் தீர்மானிக்கும்...பிறை தேடும் இரவிலே எதை தேடி அலைகிறாய் என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...

#இன்றையதலையங்கம்.

#பாடகிசைந்தவி.

#ஜிவிபிரகாஷ்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக