பக்கங்கள்

வியாழன், 11 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


வாழ்வென்றால் சிறு அர்த்தம்

ஏதேனும் இருக்க வேண்டும் என்பது

என்னை பொறுத்தவரை

நான் அதை மதிப்பதே இல்லை...

நான் வாழ்ந்து முடித்த பின்

என் வாழ்வின் பயணத்தில்

என்ன தான் சுவாரஸ்யமான விசயங்கள்

இருந்தது என்று தேடி 

திரிபவர்களுக்காக

நான் ஒரு துளி சிந்தி அவர்கள்

சுவாரஸ்யத்தை கூட்டிச் செல்வதில் தான்

அலாதி சுகம் எனக்கு!

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவு கவிதை 🍁

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக