பக்கங்கள்

திங்கள், 15 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இங்கே தேவை

ஒரு இளைப்பாறுதல்!

அதை விட தேவை

கொஞ்சம் தனிமையோடு

கனிந்து களித்திருத்தல்...

எப்போதும்

ஒரு ஊடலும் இல்லாத 

ஒரு ஜென் நிலையில் 

சுகித்திருத்தலே

என் வாழ்வின் அடையாளம்...

இதைத் தவிர வேறு எந்த வித

தேவையோ சலசலப்போ

இல்லாத நதியின் பயணமிது

என் வாழ்வின் ஒரு பெரும் பயணமான

துயரமற்ற பயணமது....

#இரவு கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக