பக்கங்கள்

வியாழன், 12 அக்டோபர், 2023

நிழல் போல தொடர்கிறது...

 


நிழல் போல தொடர்கிறது

நான் விரும்பாவிட்டாலும்

சில நிகழ்வுகள்...

நான் அதன் பெரும் பசிக்கு 

சோளப்பொறியானேன்..

இதை யோசித்துக் கொண்டே 

இருந்த போது 

எதனோடும் பயணிக்காத 

அந்த சில மணித்துளிகள்

என்னை சத்தம் இல்லாமல்

கடந்து சென்றதை தான்

என்னால் 

மீட்டெடுக்க முடியவில்லை...

#இரவுகவிதை.

நாள் 12/10/23.

நேரம் இரவு 10:31.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக