பக்கங்கள்

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

இரவு கவிதை 🍁


நொடிகளில் நகர்கிறது

எனக்கான தேடல்...

நான் நொறுங்கி போகிறேன்...

தேடலின் தாபத்தில்...

நொடிகளோ

கண்டுக் கொள்ளாமல்

சத்தம் இல்லாமல்

நிச்சலனமாக பயணிக்கிறது...

இருந்து விட்டு போகட்டும்...

நொறுங்கல்களை சத்தம் இல்லாமல் என்னால்

சேகரித்து வைத்துக் கொள்ள

முடியாதா என்ன?

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவுகவிதை.

நாள்:29/09/2023.

நேரம் 11.06.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக