பக்கங்கள்

திங்கள், 18 செப்டம்பர், 2023

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:- திரைப்பட நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று வழக்கம் போல சொல்லி விட்டு போக மனம் இல்லை... மிகவும் மனம் வேதனை அடைகிறது.. இன்றைய நமது கல்வி முறை சரியா என்கின்ற கேள்வி நமக்குள் நிகழ்கிறது.. எப்போதெல்லாம் இப்படியான நிகழ்வுகள் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இதை பற்றி பேசி விட்டு கடந்து சென்று விடுகிறோம்.. பள்ளியில் சேர்த்து விட்டு நமது கடமை முடிந்து போய் விடுகிறது என்று சில பேர் இருக்கிறார்கள்.. இன்னும் பல பேர் குழந்தைகள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்று கண்டுக் கொள்ள நேரம் இல்லாமல் அவரவர் பணி சூழல் அவர்களை சிறைப்படுத்துகிறது.. சில குழந்தைகள் வாய் விட்டு பாட திட்டம் கடுமையாக உள்ளது என்று சொல்லி விடுவார்கள் பெற்றோரிடம்..அப்போதே சுதாரித்து நாம் அவர்களை அந்த சூழலில் இருந்து விடுபட வைக்க வேண்டும்.. இந்த பாட திட்டம் தான் சிறந்தது இந்த பாடத்திட்டத்தில் படித்தால் தான் மதிப்பு என்று நாம் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வரைமுறைகள் வகுத்து விடுவது தான் தீராத வேதனை நமக்கு தந்து விடுகிறது..இதை இனியாவது பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.. அரசு பள்ளிகளில் படித்து நிறைய விஞ்ஞானிகள் உருவாகி இருக்கிறார்கள்.நிறைய பேர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.. ஏன் என்னோடு படித்த தோழிகள் நிறைய பேர் நல்ல நிலையில் தான் இருக்கிறார்கள்.. இங்கே எந்த பள்ளி என்பது விசயம் இல்லை.. குழந்தைகள் கற்றல் திறன் மற்றும் கற்றலுக்கு சுதந்திரம் தான் முக்கியம் இங்கே...இதை பற்றி ஆழ்ந்த புரிதலோடு பெற்றோர்கள் இனியேனும் பயணிப்பார்களா என்பது தான் இங்கே நம் கண் முன்னே தொக்கி நிற்கும் ஆயிரம் ஆயிரம் கேள்வி...

கற்றல் என்பது ஒரு உயிரோட்டமான நிகழ்வே தவிர மரணத்தை நோக்கிய பயணம் அல்ல... யோசியுங்கள் பெற்றோர்களே🙏.

#இன்றையதலையங்கம்.

#கற்றல்

#மாணவமாணவிகள்தற்கொலை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக