பக்கங்கள்

சனி, 23 செப்டம்பர், 2023

துரத்தி செல்லும் எண்ணம் இல்லை...

 


நம்மில் பலரும் எதையோ தேடி தேடி தொலைந்து கொண்டு தான் இருக்கிறோம்.. நானும் அப்படி தான்... தேடிக் கொண்டே இருக்கிறேன்.. எனக்கான விசயத்தை எங்கே புதைந்து இருக்கிறது என்று.. நான் தேடும் போதே அந்த பொருள் என்னை பார்த்து விட்டு நழுவி நழுவி போய் விடுகிறது.. துரத்தி செல்லும் எண்ணம் எப்போதும் இல்லை எனக்கு.. நான் இருக்கும் விசயத்தில் அனுபவிக்கிறேன்..தொலைந்த விசயமோ கொஞ்சம் கொஞ்சமாக புதைந்த இடத்தில் இருந்து மேலே வந்து என்னை கொஞ்சம் தலை திருப்பி பார்க்கிறது..

நானோ அதன் பக்கம் பார்வையை திருப்பாமல் திரும்பிக் கொள்கிறேன்..

அது சோர்ந்து போய் விட்டது.. நமக்கான அங்கீகாரம் பறிக்கப்பட்டு விட்டதோ என்று.. நம்மில் பலரும் இப்படி தான் பலபேரின் தேடலுக்கு காரணம் ஆகி பிறகு கண்டுக் கொள்ளாமல் சிதறி போய் விடப்படுகிறார்கள்..

#இசைச்சாரல்வானொலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக