பக்கங்கள்

ஞாயிறு, 9 ஜூலை, 2023

இரவு கவிதை 🍁

 

பிரியமான நேரத்தில் தான்

அந்த தொலைதல் நடந்தது!

பிரியம் இல்லை என்று ஒதுங்கி

பயணித்து விட்டாய்!

நானோ அந்த தொலைதலில்

மூழ்கி மூச்சற்று கிடக்கிறேன்!

இதுவும் ஒருவித வாழ்வின் நகர்வு

என்று அங்கே முணுமுணுத்து 

தொலைக்கிறார்கள்!

அந்த முணுமுணுப்பு தான்

என்னை கொல்லாமல் கொல்கிறது!

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக