பக்கங்கள்

செவ்வாய், 29 நவம்பர், 2022

இரவின் கதகதப்பில்


அத்தனை நட்சத்திரங்களையும்

ரசிக்கிறேன்..

இந்த இரவு இதமான 

அமைதியை தந்து 

எனது செயலை வேடிக்கை

பார்க்கிறது..

நட்சத்திரங்களோ குதூகலிக்கிறது

எனது நேசத்தை பார்த்து...

நாங்கள் அமைதியாக

எங்கள் காதலை

பரிமாறிக் கொண்டோம்...

இதோ விடிவெள்ளி வந்து விட்டது

நான் விடைபெற 

எத்தனைக்கும் போது 

ஒரு நட்சத்திரம் 

என்னை தழுவ

வேகமாக விழுகிறது..

இதோ இந்த ஆத்மார்த்தமான

காதலின் அருமை

எவருக்கு புரியக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக