பக்கங்கள்

புதன், 30 நவம்பர், 2022

காலத்தின் கண்டுக் கொள்ளாத பயணம்


வாழ்க்கை எதையும் 

கண்டுகொள்ளாமல் 

பயணிக்கிறது;

நாம் பல இடங்களில்

தேங்கி நிற்கும் போது

அது பல மைல் தூரம்

கடந்து கொஞ்சம் திரும்பி பார்த்து

நாம் எங்கோ தேங்கி

தடுமாறி நிற்பதை பார்த்து

கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் 

பயணிக்கிறது..

நான் அந்த இரக்கமற்ற தன்மையை 

நேசிக்கிறேன்..

இங்கே இரக்கத்தால்

ஆவது ஒன்றுமில்லை..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக