பக்கங்கள்

திங்கள், 28 நவம்பர், 2022

இருள் எனும் காதலன்

 


எனக்கான நேரத்தில்

நான் இரவை நேசிக்கிறேன்

இருளின் சாயலை

இங்கே எவரும் பெற

விரும்பாத போதும்

நான் அதை நேசித்து கைப்பிடித்து

ஆள்அரவமற்ற அந்த சாலையில் 

பயணிக்கிறேன்..

இருளின் மௌனத்தை

நான் புரிந்துக் கொள்ள

சிறிதும் முயற்சி செய்யவில்லை..

நானும் அதே நிலையில்

இருக்கும் போது

அந்த புரிதல் தேவையற்றது..

ஏன் நீ என் கரம் பிடித்து

பயணிக்கிறாய்

என் மீது கொண்ட அனுதாபமா 

என்றது இருள்...

இல்லை இல்லை

உன் ஆழ்ந்த அமைதியின்

காதலை புரிந்துக் கொண்டு

உன் கரம் பிடித்து

நடக்கிறேன் என்றேன்..

அந்த வெளிச்சமற்ற தனிமையில்

தேகத்தின் மீது துளி மோகம்

இல்லாமல் பயணிக்கும்

நாங்கள் யார் என்று

அங்கே இரவின் நிசப்தத்ததை

தனது குரலால்

தாலாட்டும் இரவு பூச்சிகள்

ஆச்சரியமாக தங்களுக்குள்

பேசிக் கொண்டதை

எதேச்சையாக கேட்டு

நாங்கள் அந்த நெடுஞ்சாலையில் 

பயணிக்கிறோம்..

இன்னும் விடியலுக்கு

நேரம் இருக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக