பக்கங்கள்

திங்கள், 21 நவம்பர், 2022

சொல்லாமலே விடை பெறும் வலி

 

அந்த காய்ந்த சருகு

கீழே விழுவதற்கு முன் 

இறுதி நினைவு என்னவாக இருக்கும்?

இவ்வளவு நாள் அடைக்கலம் தந்த

அந்த மரத்தை பற்றியா?

இல்லை குழந்தையை போல சுமந்த

அந்த கிளையைப் பற்றியா?

இல்லை தன் வலியை எவருக்கும்

சொல்லாமல் உயிரூட்டி வளர்த்த

வேரை பற்றியா?

விடை பெறும் தருணத்தில்

ஆயிரம் நினைவுகள் நீந்தி செல்கிறது

ஒவ்வொருவரின் உள்ள கிடக்கையிலும்

சொல்லாமலே விடை பெறும் வலி

இங்கே யாருக்கு புரியும்?

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக