பக்கங்கள்

வெள்ளி, 14 அக்டோபர், 2022

காலத்தின இரங்கற்பா


 இருளுக்கு மிக நீண்ட

இரங்கற்பா எழுதிக் கொண்டு

இருக்கும் போதே

அங்கே பகல் வந்து

எனக்கும் இரங்கற்பா எழுது என்று

கெஞ்சுகிறது..

இப்படியே இரங்கற்பா எழுதி எழுதி

ஓய்ந்து இந்த பிரபஞ்சத்திலிருந்து

விடை பெறும் போது

காலம் எனக்கு இரங்கற்பா

மௌனமாக எழுதி விடுகிறது..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக