பக்கங்கள்

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

என் மீது பேரன்பு கொண்ட ரசனை


என்னை சுற்றி நடக்கும்

நிகழ்வுகள்

என்னை கேலி செய்து

சிரிக்கிறது...

நீ இந்த பிரபஞ்சத்தில்

கொஞ்சமும் வாழ

தகுதி இல்லாதவர் என்று..

நான் அதை எதிர்க்காமல்

ஆமோதிக்கிறேன்..

நான் இதுவரை மூச்சு காற்றும்

கொஞ்சம் ரசனையும்

போதும் என்று நினைத்தேன்..

நடப்பதென்னவோ வேறாக

இருக்கும் போது

நான் என்ன செய்ய இயலும்?

கொஞ்சம் கவலையோடு தான்

இருந்தேன்..

ஏன் இந்த கவலை என்று

என் மீது பேரன்பு கொண்ட

ரசனை கட்டிக் கொண்ட போது

நான் இந்த பிரபஞ்சத்தை பார்த்து

பலமாக சிரித்தேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக