பக்கங்கள்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

சித்தரும் பித்தரும்

 

இந்த பிரபஞ்சத்தில்

சித்தரையும்

எவரும் கண்டுக் கொள்வதில்லை

பித்தரையும்

எவரும் கண்டுக் கொள்வதில்லை..

சித்தரும் பயம் இல்லாதவர்

பித்தரும் பயம் இல்லாதவர்

சித்தருக்கும் துயரம் இல்லை

பித்தருக்கும் துயரம் இல்லை

இங்கே இருவரையும் 

புரிந்துக் கொள்ள

எவரும் துணிவில்லை

இருவரும் இந்த உலகை

கண்டுக் கொள்ளாமல்

பயணிப்பதால் நிம்மதியாக

இருக்கிறார்கள்..

இவர்களின் நிம்மதியை பார்த்து

சம்சாரிகளோ

எரிச்சல் அடைகிறார்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக