பக்கங்கள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

இன்னும் சில நொடிகளை யாசிக்கிறாய்

 


அத்தனை நொடிகளையும்

நீயே அதிகாரம் செய்ய

கொடுத்தும் கூட

நீ இன்னும் சில நொடிகள்

என்னிடம் யாசித்து

நிற்கிறாய்...

நான் என்ன செய்வேன்

காலத்தின் கைகளில்

சிக்கிக் கொண்ட

நொடிகளை உனக்காக

அதிகரிக்க சொன்னால்

அது என் அதிகாரத்தை

கேட்க வேண்டுமே...

அது என்னை போல

அல்ல...

சொன்னவுடன் பணிந்துவிட..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக